பிரம்ம சூத்திரக் குழு - சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு ஆன்மீகக் குழு. பிரம்மம் என்றால் மனிதன் என்று பொருள். சூத்திரம் என்றால் ரகசியம் என்று பொருள். ஆக ஒரு மனிதன் தான் யார் என்ற ரகசியத்தை உணரும் கலையைக் கற்றுக்கொடுக்கும் குழுவே பிரம்ம சூத்திரக் குழு. இதனை தொடங்கி நடத்தி வருபவர் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் அய்யா. இவர் கற்றுக்கொடுக்கும் கலை ராஜயோகம். இவர் கற்றுக்கொடுக்கும் கலைக்கான ஆதாரம் சித்தர் பாடல்களில் உள்ளன. இவர் வேறு எந்தவிதமான புத்தகங்களையோ, எழுத்துருக்களையோ தமது கலைக்கான பாடங்களுக்கு ஆதாரமாக காண்பிப்பதில்லை. சித்தர் பாடல்களை மட்டுமே ஆதாரமாக விளக்கிக்கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், இக்கலையை கற்றுக்கொண்ட பின்னர்தான் சித்தர் பாடல்களுக்கான விளக்கங்கள் கொஞ்சம் புரிய ஆரம்பிக்கின்றன. ஏனென்றால் சித்தர் பாடல்கள் என்பது பாடல்கள் அல்ல. அவை பாடங்கள். ஞானத்தை அடையக்கூடிய ரகசியங்களை பாடல்களாக வகுத்து வைத்திருக்கிறார்கள். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இத்தகைய அரிய பொக்கிசக்கலையை தம்மை நாடி வருபவர்களுக்கு மனமுவந்து கற்றுகொடுத்து வருகிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் அய்யா அவர்கள். மற்ற எந்த நாட்களிலும் இவரைத் தொடர்பு கொண்டு ஆன்மீகம் தொடர்பான கேள்விகளை கேட்கலாம். ஆனால் யோகப்பாட உபதேசம் என்பதை பவுர்ணமி தினத்தன்று மட்டுமே அளிக்கிறார். இல்லறத்தில் உள்ளவர்கள் கட்டாயம் இக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஞானம் என்பது காடுகளில் சென்று தேடுவதில்லை.
விவரங்கள் பெற -
பிரம்மசூத்திரக் குழு
சென்னை.
+91 97102 11469
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment